தமிழ்நாடு

இந்து அமைப்பினரை கொல்ல திட்டம் தீட்டியதாக வழக்கு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை, 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனு நீதிபதி செந்தூர்பாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 நாள் போலீஸ் காவல் முடிந்த பிறகு ஏழு பேரையும், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் இருந்த 7 பேரையும், தேசிய புலனாய்வு முகமை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்வதற்காக அழைத்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை