தமிழ்நாடு

இந்து அமைப்பினரை கொல்ல திட்டம் தீட்டியதாக வழக்கு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை, 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனு நீதிபதி செந்தூர்பாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 நாள் போலீஸ் காவல் முடிந்த பிறகு ஏழு பேரையும், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் இருந்த 7 பேரையும், தேசிய புலனாய்வு முகமை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்வதற்காக அழைத்து சென்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு