தமிழ்நாடு

"மாநில நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைப்பீர்களா?" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மாநில நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி அமைத்து வசூலிப்பீர்களா என தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல் தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் செயல்படுவதையும், 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கச் சாவடி உள்ளதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேங்கி நின்று அவதிப்படுவதாகவும் கூறியிருந்தார். மதுரை எல்லைக்குள் மட்டும் 5 சுங்கச் சாவடிகள் உள்ளதை குறிப்பிட்ட அவர், 60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச் சாவடி அமைக்கும் விதி மீறும் அரசாணையை ரத்து செய்யவும் அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி அமைப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அடுத்தமாதம் 11ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்