தமிழ்நாடு

சித்த வைத்தியர் தணிகாச்சலம் கைதான விவகாரம்:"போலீஸ் காவல் 4 நாட்களாக குறைப்பு" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட சித்த வைத்தியர் தணிகாச்சலத்தின் 6 நாள் போலீஸ் காவலை, 4 நாட்களாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட சித்த வைத்தியர் தணிகாச்சலத்தின் 6 நாள் போலீஸ் காவலை, 4 நாட்களாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிகாச்சலத்தை ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தணிகாச்சலம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போலீஸ் காவல் முடிந்து வருகின்ற மே 16-ஆம் தேதி ஆஜர்படுத்தும்போது, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்