தமிழ்நாடு

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் எனவும், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.போதையில் வாகனம் ஓட்டியவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை