தமிழ்நாடு

காலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட மூவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி, அனுப்பட்ட நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தங்கள் வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுபடி, செங்கல்பட்டு வட்டாட்சியரும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது, அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்களா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.வீட்டை இடிக்க உத்தரவிடவில்லை என அப்போது கூறிய பெண் வட்டாட்சியர், மன்னிப்பு கோரினார். ஆனால், வட்டாட்சியர் தான் இடிக்க உத்தரவிட்டார் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திட்டவட்டமாக கூறினார்.இதையடுத்து இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை