தமிழ்நாடு

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் - விவசாய நிலங்களை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, 9 விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலில் தரிசு நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் எந்த அறிவிப்பும் இன்றி விவசாய நிலம் கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, 4 வாரங்களில் தகுந்த உத்தவு பிறப்பிக்க வேண்டும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்