தமிழ்நாடு

பெண் அதிகாரி மீதான வழக்கு.. பொன் மாணிக்கவேல் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

அறநிலையத் துறை கூடுதல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து, ஆவணங்களை தாக்கல் செய்ய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபரம் , ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, இரண்டு சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, தமிழக அரசு அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா, தாக்கல் செய்த மனுவில் தனக்கும் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை எனவும், 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதிகாரி பொன் மாணிக்கவேல், கவிதாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு