தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. அரசாணையில் பிளாஸ்டிக் தடை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மட்டுமின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக்கையும் தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ