தமிழ்நாடு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* இதையடுத்து கேன் குடிநீர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

* இந்நிலையில் வழக்கின் விசாரணை, இன்று வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

* வாதங்களை கேட்ட நீதிபதிகள், மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

* விண்ணப்பத்தோடு, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* மேலும், சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* குடிநீர் ஆலைகள் மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

* அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

* இந்நிலையில் தீர்ப்பின் எதிரொலியாக, கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்