தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் சாணப்பிரட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு காரணமாக ஏற்கனவே மணல் அளவு குறைந்திருப்பதாகவும், ஆனால், முறையாக ஆய்வு செய்யாமல் மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. அந்த பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தாத நிலையில், அவசரகதியில் அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டு மணல் குவாரி நடைபெற்று வருவதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, குவாரி செயல்பட இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு