தமிழ்நாடு

பல முக்கிய பொறுப்பு வகித்த ஐகோர்ட் நீதிபதி `தீடீர் மரணம்’

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார். 1969ம் ஆண்டு பிறந்த அவர் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர்..1997ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி சத்தியநாராயண பிரசாத், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய உணவு கழகத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 42 வது நீதிபதியாக இருந்த இவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனிடையே நீதிபதியின் மறைவையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் 7ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறாது என்றும், 8ம் தேதி பட்டியலிடப்படும் வழக்குகள் 9ம்தேதி விசாரிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்