தமிழ்நாடு

நவீன வசதிகளுடன் புதிய நீதிமன்ற கட்டடம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

எழும்பூரில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் சுமார் 26 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்,, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், சம்பந்தபட்டவர்கள் வெற்றி பெற்றாலும் கூட அது சோர்வை ஏற்படுத்துவதாக கூறினார். நீதிமன்றங்கள் விரைந்து நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்