தமிழ்நாடு

படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அங்குள்ள காளிதிம்பம் மலைகிராமத்தை சேர்ந்த சாமிநாதன்- மாரம்மாள் தம்பதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். இவர்களின் மகள் சிவரஞ்சனி, மகன் ஹரிபிரசாந்த் ஆகிய இருவரும் வருவாயின்றி, மேற்படிப்பை தொடர முடியாமல் பரிதவிக்கின்றனர். உறவினர்கள் கைவிட்டதால் சகோதரனை படிக்க வைக்க மாணவி சிவரஞ்சனி, கூலி வேலைக்கு செல்கிறார். ஆடிட்டராக வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி சென்றும் படிப்பை தொடரமுடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்த சிவரஞ்சனி, பெற்றோரை இழந்து நிற்கதியான நிலையில் இருக்கும், தானும், தனது சகோதரனும் மேற்படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை