ஒரே இரவில் மதுரையை பதம் பார்த்த கனமழை... மிதக்கும் முக்கிய இடங்கள் மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கர்டர் ரயில்வே தரைப்பாலம் முழுவதுமாக மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுப் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தத்தனேரி, பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலுள்ள ரயில்வே தரைப்பாலங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்த வழிகளிலும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.