தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை : தயார் நிலையில் ஆட்சியர்கள் - வருவாய்துறை ஆணையர் சத்யகோபால்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 275 போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* கடலோர மாவட்டங்களில் 60 முதல் 80 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 40 முதல் 50 போலீசாருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

* வட்டாட்சியர் அல்லது உதவி ஆட்சியர் தலைமையில் 692 பல துறை அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் நாளை மறுநாள் பணியை தொடங்குவார்கள் எனவும் சத்யகோபால் தெரிவித்தார்.

* தென்மேற்கு பருவமழை பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சத்ய கோபால் தெரிவித்தார்.

* எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர்களுக்கு ​அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு