தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை : தயார் நிலையில் ஆட்சியர்கள் - வருவாய்துறை ஆணையர் சத்யகோபால்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 275 போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* கடலோர மாவட்டங்களில் 60 முதல் 80 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 40 முதல் 50 போலீசாருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

* வட்டாட்சியர் அல்லது உதவி ஆட்சியர் தலைமையில் 692 பல துறை அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் நாளை மறுநாள் பணியை தொடங்குவார்கள் எனவும் சத்யகோபால் தெரிவித்தார்.

* தென்மேற்கு பருவமழை பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சத்ய கோபால் தெரிவித்தார்.

* எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர்களுக்கு ​அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்