• மழைநீரில் மூழ்கிய 5,000 ஏக்கர் தாளடி பயிர்கள்
• திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் மாங்குடி, வரம்பியம், ராயநல்லூர், வங்கநகர், மருதவனம், சோலைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைநீர் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.