Heavy Rain | Accident | ரோட்டில் ஆறாய் ஓடிய மழைநீர்.. பயணிகளோடு கவிழ்ந்த ஆட்டோ.. பதறவைக்கும் காட்சி
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தின் லோனி பகுதியில், வெள்ள நீரில் சிக்கிய ஆட்டோ ஒன்று பயணிகளுடன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. கனமழை காரணமாக லோனியில் உள்ள டெல்லி – சஹாரன்பூர் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், தேங்கியிருந்த வெள்ள நீரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக ஆட்டோவில் இருந்து வெளியேறினர். நல்வாய்ப்பாக, ஆட்டோவில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.