தமிழ்நாடு

"போராட வயது வரம்பு உள்ளதா?" - மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

போராட்டங்களில் பங்கேற்க வயது வரம்பு உள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிஏஏ போராட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். சட்ட விதிகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை