தமிழ்நாடு

இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...

கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வழியாக பாலக்காடு வரும் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்