தமிழ்நாடு

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

தந்தி டிவி

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட செல்போன் கடை ஊழியரை மீட்ட போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சுமித் சிங்-கின், செல்போன் சிக்னலை வைத்து அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்புக்கு விரைந்த யானைகவுனி போலீசார்,

ஜிஎஸ்டி அதிகாரியான சுரேந்தர், வங்கி அதிகாரியான நவீன் குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் தேடி வருகின்றனர். எத்தனை நாட்களாக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதாக கடத்தப்பட்ட சுமித் சிங்கிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்