தமிழ்நாடு

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

தந்தி டிவி

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட செல்போன் கடை ஊழியரை மீட்ட போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சுமித் சிங்-கின், செல்போன் சிக்னலை வைத்து அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்புக்கு விரைந்த யானைகவுனி போலீசார்,

ஜிஎஸ்டி அதிகாரியான சுரேந்தர், வங்கி அதிகாரியான நவீன் குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் தேடி வருகின்றனர். எத்தனை நாட்களாக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதாக கடத்தப்பட்ட சுமித் சிங்கிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை