புனித ஹஜ் பயணத்திற்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு , புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4ஆயிரத்தி 464 பேர் தேர்வு செய்யபட்டிருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து சவுதி ஆரேபியா ஜித்தா நகருக்கு சென்ற முதல் விமானத்தில் 423 ஹஜ் பயணிகள் புறப்பட்டு சென்றனர் . பயணிகளை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5 ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.