வகுப்பறையில் மாணவர்களுக்கு முடி திருத்தம் - அதிரடி காட்டிய ஆசிரியர்கள் கடலூரில் நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே முடி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். மேலும், நீண்ட முடி வைத்திருந்த மாணவர்களின் பெற்றோருக்கும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்றோர் அக்கறை காட்டாததால், காவல்துறையினர் முன்னிலையில் மூன்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே முடி திருத்தப்பட்டது. மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்த பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.