உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்துள்ளது. இந்த வழக்கில் வரும் 22ஆம் தேதி அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.