தமிழ்நாடு

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் அமலாக்கத்துறை இய​க்குநர் ஷெரோன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் காலை 10.30 முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்