தமிழ்நாடு

உரிமை மீறல் நோட்டீஸ் : ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை தீர்ப்பு

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

தந்தி டிவி

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்து வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவை பெற்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, கடந்த 12 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவே அதை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்ததாக திமுக தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் திமுக உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. ஆனால், சபையின் மாண்பை அவமதிக்கும் வகையில் குட்கா கொண்டு வந்ததால் தான் உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு