தமிழ்நாடு

நாட்டை உலுக்கிய கோர விபத்து - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய பொதுநல மனுவை, நவம்பர் 14ம் தேதி பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் தொங்கு பாலம் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட கோரி, வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், நாடு முழுவதும் உள்ள பழமையான தொங்கு பாலங்கள் தொடர்பாக விரிவான பாதுகாப்பு தணிக்கை செய்யவும், தொங்கு பாலத்தின் விபத்துக்கள் குறித்து நிரந்தர பேரிடர் விசாரணை குழுவை உருவாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

வழக்கறிஞனின் முறையீட்டை பரிசீலத்த நீதிபதிகள், தொங்கு பாலம் விபத்து தொடர்பான பொதுநல மனுவை நவம்பர் 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்