குடியாத்தம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். தன்னுடைய பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார். ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர் வேலையிழந்து நிற்கும் நிலையில் அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.