தமிழ்நாடு

குரூப்-1 தேர்வு - 66 காலி பணியிடங்கள் - 856 மையங்களில் ‌2.57 பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஏப்ரல் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, இந்த தேர்வில் இருந்து புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் பெட்டிகளுக்கு GPS Locker பொருத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்