தமிழ்நாடு

சென்னையில் தரை மட்டமாக இடிப்பு - களத்தில் இறங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான சாலைகள் விரிவுபடுத்தும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நீலாங்கரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையாக நோட்டீஸ் வழங்கி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் இடித்து நிலங்களை மீட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மீட்கப்படும் நிலத்தை தங்கள் ஊர் கோயில் சொத்தாக எழுதி வைக்குமாறு கோரிக்கை வைத்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை