தமிழ்நாடு

ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. இட நெருக்கடியால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டன. இதனால் இடநெருக்கடியின்றி மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கட்டடம் திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை