தமிழ்நாடு

ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. இட நெருக்கடியால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் கடந்த மாதம் வெளியானது.

இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டன. இதனால் இடநெருக்கடியின்றி மாணவ-மாணவிகள் வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கட்டடம் திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்