திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் இருளில் தவித்தனர். மேலும் இந்த அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.