தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் 100 அரசு பள்ளிகளில் ஸ்கூல் ஐடிஐ தொடங்கும் திட்டம் உள்ளதாக, ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில், படிக்க இயலாத மாணவர்கள் உள்ள பள்ளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஸ்கூல் ஐடிஐ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.