தமிழ்நாடு

"8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு" - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில், மதிய உணவளிக்கும் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் மூலம் 50 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, 25க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட, சமூக நல ஆணையர் அமுதவள்ளி உத்தரவிட்டுள்ளார். அருகிலுள்ள மையங்களில் உணவு சமைத்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி போராட்டம் நடத்த தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை