தமிழ்நாடு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு, 17 பி பிரிவின் கீழ், நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக 7500 ரூபாய், சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் தொடங்க உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு