தமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு, ஆதாரங்கள் தாக்கல் செய்யாமல், பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.