சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் சிக்னல் அருகே ஒன் வே சாலையில் எதிர்திசையில் வந்த அரசு மாநகரப் பேருந்தை தலைமை போக்குவரத்து காவலர் கார்த்திகேயன் தடுத்து நிறுத்தினார். அரசு பேருந்தாக இருந்தாலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான் எனக் கூறி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினார்.