தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழப்பு - தப்பியோடிய பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் வலை

திருப்பூர் பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர், பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளியான மல்லீஸ்வரன், தனது மனைவி மற்றும் 5 மாத குழந்தையுடன், சாமி கும்பிடி குலதெய்வம் கோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில், குழந்தை யஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயம் அடைந்த, தாய் கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தப்பியோடிய பேருந்தின் ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு