தமிழ்நாடு

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல்,14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூரில் இருந்து 9ஆம்தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலை சேரும் என கூறியுள்ளார். அதேநாளில், காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் மற்றொரு சரக்கு விரைவு ரயில், இரவு 10 மணிக்கு எழும்பூரை அடையும் எனக் கூறியுள்ளார். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே