தமிழ்நாடு

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல்,14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூரில் இருந்து 9ஆம்தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலை சேரும் என கூறியுள்ளார். அதேநாளில், காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் மற்றொரு சரக்கு விரைவு ரயில், இரவு 10 மணிக்கு எழும்பூரை அடையும் எனக் கூறியுள்ளார். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்