கண்காட்சியில், ஆங்கிலேயர் காலத்து நீதிமன்றம், தண்டனை கொடுக்கும் முறை, மகாபாரத காட்சிகள், கிருஷ்ணர், பாமா ருக்மணி மற்றும் மாமன்னன் ராஜராஜ சோழன் குதிரையில் அமர்ந்து செல்லும் காட்சி உள்ளிட்ட பழங்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் காட்சிகள் பொம்மைகளாக இடம்பிடித்துள்ளது. இந்தப் பழங்கால பொம்மைகளின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.