துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், அளவு நாடா வடிவத்தில் கடத்திய 151 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், பயணி ஆனந்தனிடம் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தங்கம் கடத்தியது தெரியவந்தது. ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆனந்தனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.