ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் பயணி ஒருவரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தின் இருக்கைக்கு அடியில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சாகுல் ஹபீஸ் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 5 கிலோ 50 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.