தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி

கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் புதன்கிழமை சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க ஆயிரத்து 600 நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் குற்றப் பின்னணி ஆராய வேண்டும், அவ்வாறு இருப்பின் அவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரயணா மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் மூலம், 68 நிறுவனங்கள் மூலம், 2 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், நடைபெறவுள்ள மாநாடு மூலம் 2 புள்ளி 55 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை எப்படி ஒதுக்குவீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்