"நகைய கொடுங்க பணமழை கொட்டும்..." ஆசை காட்டிய நிதி நிறுவன ஊழியர் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் கோவை கருமத்தம்பட்டியில் , நகைகளை மீட்டு அதிக விலைக்கு விற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.70 கோடி மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. பணம் கொடுத்த 20-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது .போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.