சேலத்தில் காதலனை வீட்டு சிறையில் வைத்திருப்பதாக காதலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்ற இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் தேன்மொழியின் மகன் மணிகண்டனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலனை திருமணம் செய்ய முயன்றபோது, அவரை வீட்டில் அடைத்து வைத்து மிரட்டுவதாக கூறி, அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என சௌந்தர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.