தமிழ்நாடு

"திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார்" - இளம்பெண் தற்கொலை முயற்சி

பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால், அவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த இளம் பெண் தரமணியில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் பணியாற்றிய வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்த சதீஷ்சும் அவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணுடன், சதீஷ் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு சதீஷ் சம்மதிக்காததால், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை