தமிழ்நாடு

தலைமைச் செயலாளர் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்த பெண் - ஆடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணை

திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போல் பேசி 56 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அரசு வேலைக்காக முயற்சித்துள்ளார். அப்போது, சாய்அருண் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களிடம் 36 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுவதாக கூறி அவர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த சாய் அருணை பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் மற்ற நபர்களிடம் 20 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளராக பேசிய ஆடியோவை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ