தமிழ்நாடு

"4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம்" - உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக மனு

4 தொகுதி இடைத் தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் முறையிட்டுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மக்களவை தேர்தலில் ஒதுக்கியது போலவே, பரிசு பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் நாளை முறையிட உள்ளார்.ஏற்கனவே, அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"