தமிழ்நாடு

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம் | போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம்

போலீசார் தீவிர விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே, கேஸ் கசிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவரது வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மணிகண்டனின் மனைவி சரஸ்வதி, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மயக்கத்தில் இருந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அனைவரும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேஸ் கசிந்ததா? அல்லது விஷம் அருந்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு