தமிழ்நாடு

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம் | போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

கேஸ் கசிந்ததா? விஷமா? - உயிருக்கு ஆபத்தான நிலையில் குடும்பம்

போலீசார் தீவிர விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே, கேஸ் கசிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவரது வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மணிகண்டனின் மனைவி சரஸ்வதி, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மயக்கத்தில் இருந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அனைவரும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேஸ் கசிந்ததா? அல்லது விஷம் அருந்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்