தமிழ்நாடு

ஜி-20 சுற்றுச்சூழல் கூட்டம்.. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

தொழில்துறை தலைமையிலான கூட்டணி, ஆதார வளப்பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும் என மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை தொடர்பான 4-ஆவது கூட்டம், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், ஆதாரவள பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கான தொழில்துறை தலைமையிலான கூட்டணியை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். இதில், ஐரோப்பிய யூனியன், கனடா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், நீடித்த சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி-20 நாடுகளின் தலைமைத்துவத்துக்கு பிறகும் தொடரும் வகையில், இந்தக் கூட்டணி தற்சார்பு கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்