தமிழ்நாடு

நாகையில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தந்தி டிவி
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. துறைமுகம் பகுதியில் கருங்கல் தடுப்பு சுவர்களை தாண்டி அலைகள் ஆர்ப்பரித்து எழுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக சூறைக் காற்றும், கடல் கொந்தளிப்பும் அதிகரித்து வருவதால், நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், இன்று கடலுக்கு செல்லவில்லை. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்